
கூடு தேடும் பறவையை போல்
உன் நினைவுகளின் தடம்தேடி
நித்தம் நித்தம்
தேடி அலைகிறேன்.............!
வாங்கிய கடனுக்கு வட்டியை
செலுத்தும் கடனாளியைப் போல்
வார்த்தைகள் மட்டும்
உதிர்த்து போகிறாய் உயிரற்றதாய்................!
நினைவை கொண்டு நிஜத்தை
தேடி அலையும் எனக்கு
நிஜம் மட்டுமல்ல
நினைவுகள்கூட சொந்தமில்லை
என்று கூறிச்செல்ல
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது.............?
உதிர்ந்த வார்த்தைகள் காற்றோடு
கைகோர்த்து காணாமல் போனதா.................?
இல்லை காலத்தை கடத்துவதற்காக
கூறப்பட்டதாய் எண்ணி
உன்னுடனே வந்து சேர்ந்ததா......................?