தேடல்


பிளந்துபோன இதயத்தில்
வார்த்தைகள்..........
இங்கொன்றும் அங்கொன்றுமாய்........!

பிளவிற்கு காரணம்
என்னவோ.............?

நட்பென்றால்
கவலையில்லை..........!

காதலென்றால்..............
எங்கே தேட..........?

உங்களிடமிருந்தால்...
கொடுத்து விடுங்களேன்...........!

கடவுள்



நிழல்களை நிஜங்களாக்கவும்
நிஜங்களை நிழல்களாக்கவும் அறிந்தவனே...........!

உந்தன் விளையாட்டுப் பொருளாய் எம்மை
படைத்து விளையாட விடுபவனே.........!

எம்மை அறிந்தால் உம்மை
அறிய முடியும் என்பதை....
உணர்வில்லாமல் உணர்த்துபவனே.................!

உன்னை அறிந்ததை உணர்த்தாமல்
எம்மையும் உணர்விழக்கச் செய்பவனே..........!

உன்னை வணங்குகிறேன்
ஆனால்............?

உன்னை உணர்வதற்காக அல்ல.............!
என்னை உணர்வதற்காகவே.............!

காணிக்கை


உன் நினைவுகளால் உறங்கிப்போன
எனக்கு கனவுகள்
மட்டும் காணிக்கையா...?

புதுப்பிக்கப்பட்ட உறவுகள்


விடலைப் பருவத்து நாட்களில்
பாதை புரியாமலும் தெரியாமலும்
பயணிக்கும் பள்ளிப் பருவத்தில்
இணைந்திருந்த மலர்கள் நாங்கள்..........................!

பாதையை புரிய வைக்கும்
நோக்கத்தில் விதித்திருந்த
கட்டுப்பாட்டில் பாலின ரீதியாக
பிரிக்கப்பட்டவர்களானோம்........................!

இதயங்களில்
ஏக்கங்களோடு..........!

முகவரி இல்லா பறவைகளைப்போல்
நாங்களும் சில வருடங்களை
வீணாக்கினோம்.........!

இரைதேடும் பறவையாய்
நானிங்கு அலைந்து கொண்டிருந்தேன்
முகவரிகளுக்காக...............!

வருடங்களை விழுங்கி
வசந்தத்தை கொண்டுவந்தது
சில முகவரிகள்.............!

முகவரிகளின் பரிமாற்றத்தில்
சோலைவனமாயின என்மனம்....

பரிமாறிக் கொண்டவர்களின்
மனமும் அப்படித்தானே.................?

துவண்டு போகும் தருணங்களில்
தோள் தந்து துணைநிற்கும்
முகவரிகளை மறைத்ததற்காக
வஞ்சம் இறைவன் மீது
கொண்டாலும் காலம்
கடந்து திருப்பி தந்ததற்காக
வணங்குகிறேன் மனதார அவனை...............!

முகவரிகளின் பறிமாற்றாங்கள்
பயணிக்குமா..........................?

நிமிடங்களில்லா நாட்கள் என
காரணம் காட்டி..
பரிமாற்றுப்பயணம் முடிந்துபோகுமா...................?

விடகளைப்பெறுவோம்
காலதேவனின்
நாட்குறிப்பேட்டிலிருந்து......................!