முத்தம்


" பூமியை தொட்டபின்
முழுமையான அன்புடன்
வாரித்தழுவி நீ
ஆசையாய் கொடுத்த
முதல் முத்தத்திற்காகவே

மீண்டும் ஒருமுறை உன்னுள்
கருவாயிறுக்க ஏங்குகிறேன்......!

உன்னுடன்


உன்னுடன் பேச எண்ணி
நெருங்கும் பொழுதுகளெல்லாம்
கறைகின்றன மௌனமாகவே....!

அவளின் நினைவுகளால்


உன் நினைவுகள்
என் நெஞ்சில்
தோன்றும் போதெல்லாம்
மனமெங்கும்
பூக்களின் வாசனைதான்॥!

அந்த வாசனையிலே
நான் என்னை
மறந்து விடுவேனா
என்றே பயப்படுகிறேன் ......!

அன்பு

அன்பின் பிறப்பிடம் அல்ல
அன்பின் உறைவிடமே அம்மா
அவளுக்கு கிடைக்காத ஒன்று
அந்த அன்பு........!

இறைவன்


அவனின்றி அணுவும்
அசையாது.. ஆனால்
ஏனோ மனம் அவனை
மட்டும் நினைக்க மறுக்கிறது...!

விதவை


அனைத்தையும்
இழந்தவள்...
உணர்ச்சிகளை தவிர..!

அவளின் முடிவை எண்ணி

உன் விழிகாணும் இரவுகளில்
சூரியனாய் ஒளிர்வேனா...? இல்லை
சந்திரனாய் மறைவேனா...?
முடிவு உந்தன் வார்த்தைகளில்....!

சோம்பலும் சுறுசுறுப்பும்

விடியாத இரவில்
விடியும் பொழுதை
தேடினேன் கிடைத்தது..
விடிந்த பொழுதில்
விடியாத இரவை
தேடினேன் கிடைக்கவில்லை .....!

மனதின் சோம்பல்

சொப்பனத்தில் சுகம்
கண்டிடும் மனமே...

காலம் என்ற சோலையில்
புகுந்து தோல்விகள்
எனும் முட்களைஏற்றி

அனுபவம் என்ற
வடுக்களை பெற்று
வெற்றி எனும் சுகத்தை
காணமறுப்பதேனோ..?

அவளின் மௌனம்


உன்னைக்கடந்து செல்லும்
ஒவ்வொரு தருணங்களிலும்

எந்தன் நெஞ்சிலோ....
சலனம்...

உந்தன் நெஞ்சிலோ
மௌனம்...

சலனமே விதியென்று
சாம்பலாகிப்போவேனா..? இல்லை

மௌனம் கலைந்து
மணம்பெற்று வாழ்வேனா....?

முடிவுகளை தீர்மானிப்பவைகளை
சந்தர்ப்பங்களும்
சூழ்நிலைகளும் மட்டுமல்ல
உனது வார்த்தைகளும்...! "

புத்தாண்டை வரவேற்று


பூத்துக்குலுங்கும் பூமியில்
புதியதாய் ஞனனம் பெற்றுள்ள
இளம்குழந்தைக்கு கள்ளிப்பாலை
விடுத்து உயிர்ப்பாலை
உண்மையாய் கொடு !

பசியில் வாடிவதங்கும்
ஏழையின் குழந்தைகளுக்கு
போதுமென உணவை
அன்பாக கொடு !

பள்ளி பருவத்தில்
கட்டணமில்லா கல்வியை
அனைவருக்கும் விவேகத்துடன் கொடு !

வாய்ப்புகளுக்காக வரம்
வேண்டிகிடக்கும் இந்திய இளம்
தூண்களுக்கு வாய்ப்புகளை
வள்ளலாக கொடு !

காமம் மட்டுமே
வாழ்க்கையின் லட்சியமாய்
கொண்டவர்களுக்கு காதலை
காணிக்கையாய் கொடு !

பருவ இளஞ்சிட்டுகளுக்கு
மனம் கவர்ந்த
மணவாளனை
மனதார கொடு !

முதிர்கண்ணிக்கு முடிந்துபோகா
வாழ்க்கையை
முந்தாணையாய் கொடு !

வட்டியை
வரதட்சணையாய் கேட்கும்
கல்நெஞ்சங்களுக்கு
திருப்பத்தை
தீர்ப்பாய் கொடு !

அன்பை மட்டும்
அரணாக கொண்டுள்ள ஏழையின்
நல் இல்வாழ்வுக்கு
வழியை உன்
விழிகளாய் கொடு !

பணமே வாழ்க்கையாய்
கொண்டுள்ள பணக்கார
நெஞ்சங்களுக்கு உறக்கத்தை௯ட
ஊதியமாய் கொடு !

கவலைகளை கனவுகளாக
கொண்ட உள்ளங்களுக்கு
இன்பத்தை
விலாசமாய் கொடு !

அனுபவத்தால் கனிந்த உள்ளங்களுக்கு
கவனிப்பை
கனிவோடு கொடு !

அணுகுண்டையும் ஏவுகணையையும்
விடுத்து செழுமையை
அன்பளிப்பாய் கொடு !

மொத்தத்தில் சமத்துவத்தையும்
சமாதானத்தையும் அன்புகலந்து
சாந்தமாய் கொடு...! கொடு......!

ஒவ்வொரு துளியிலும் நான் ( பணம் )


கருவறைக் கன்னிகளின் சுவாசம்
வாசமாய் மறைய
வைத்தவனும் நான்......!

சுயநலங்களின் சுருங்கிய
உள்ளத்திற்காக பிஞ்சுகளையும்
பொதி சுமக்க வைத்தவனும் நான்.....!

பருவத்து பெண்டிரை
பதுமைகளாக்கும் சூதாட்டத்தில்
பகைடையாய் நான்....!

காலத்தோடு இளமை கறைந்தும்
மாங்கல்யம் கிடைக்கச்
செய்யாமலிருக்க செய்தவனும் நான்....!

உண்மைகள்
ஊமையாய் போக
உயிர்மூலமும் நான்....!

இரவுகள் இருந்தும்
விடியலை விரட்டி
ஓட்டும் விதியும் நான்.....!

உரிமைகள் இருந்தும்
உறவுகள் மறைய இல்லை
உறவுகள் மறக்க அங்கு
இல்லாமல் போனவனும் நான்.....!

உயிர்கள் மறைந்தபின்
உறவை புதுப்பிக்க
அங்கே வாதாடுவதும் எனக்காக.....!

துளிகள் மட்டும் வெவ்வேறு
காலங்களில் ஆனால் ஒவ்வொரு
துளியிலும் மாறாமல் இருக்கும்
நான் யாரென்று உங்களுக்கும்
தெரிந்திருக்கும் உங்களுள் ஒருவன் .....!

பருவ ஈர்ப்பு


உன் வருகையை அறிந்ததும்
காற்றாய் பறக்குமென் இதயம்

நான் போய்வருகிறேன் என்ற
உன்வார்த்தைகளை
கேட்டதும்
கண்ணீர் சொட்டுகிறது..........!

இதுதான் காதலா...? இல்லை
பருவத்தில் மட்டுமுள்ள ஈர்ப்பா...?
விடை௯றுவாயா விழியே....?

ஓப்பனை

பூத்துக் குலுங்கும் பூக்கள் எனும் ஒப்பனை
பூமிதேவதையின் அழகை புத்தகமாய் விரிக்கிறது !

அலைகள் எனும் ஒப்பனை கடல் தேவதையின்
அழகை காதலாய் வெளிப்படுத்துகிறது !

தென்றல் எனும் ஒப்பனை அதனை பெற்றெடுக்கும்
மரங்களுக்கு அழகை தெம்மாங்காய் தருகிறது !

நிலா எனும் ஒப்பனை பரந்த வானத்திற்கும்
பூமிக்கும் அழகு சேர்க்கிறது !

தீபத்தின் சுடர் எனும் ஒப்பனை இருளை
அலங்கரித்து ஒளியாய் அழகுசேர்க்கிறது !

இயற்கையின் ஒப்பனைகள் அழகை
மேலும் செம்மைப்படுத்துகிறது !

ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம் எனும்
ஒப்பனை ஒற்றுமை எனும் தேவதையின்
அழகை குலைத்து வேற்றுமைகளால்
துன்பப்பட வைக்கிறது..! இது மட்டுமா.....?

பணமென்ற ஒப்பனையின் மறுவடிவமான
லஞ்சம் மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை
நேர்மை எனும் அழகுதேவதையை
மீட்கமுடியாத அடகுபொருளாய் வைத்து
அந்த தேவதையின் அழகை சிதைப்பதோடு

மனித வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது ..
இயற்கையின் ஒப்பனைகள் போதுமா ?
இல்லை செயற்கை எனும் ஒப்பனைகள்
அவசியமா...? சிந்திப்போம் ... "

ஊனம்


இறைவனின் படைப்பில் விளையாட்டு
பொம்மை மனிதனுக்கு கேளிச்சித்திரங்கள்
மகானின் மனதில் பரிதாபக்காறன்..!

தொலைந்தது

மனதில் மவுனமாய்
சிறகடிப்பவளே....!

சஞ்சலத்தை மட்டும்
உண்டாக்குகிறாயே....?

உன் இதயமாளிகையில்
இடம்தேடி தொலைந்து போனது......?

என் இளமை
மட்டுமல்ல வயதும் தான்....!

பிரிவு

என்னை விட்டு விலகியிருந்தாலும்
உன் நினைவுகள் என்னைவிட்டு
விலகாமல் இருப்பதேனோ............?

புன்னகை

வானத்தின் புன்னகை
மழை.....

காற்றின் புன்னகை
தென்றல்.........

மலரின் புன்னகை
மனம்........

தோல்வியின் புன்னகை
வெற்றி மட்டுமல்ல.........

அனுபவ பாடங்களும்..............!

சிறகொடிந்த மனதில் மற்றொருவளின் நினைவுகள்

மலர்ந்த அவளின்
நினைவுகளால் மறுத்துபோன
என் மனதுக்குள்

சலனமின்றி
சத்த மிடுகிறது
உன் கொலுசின் ஓசை

சில்லை றையாய்
சிதறுகிறது
உன் சிரிப் பலை

ஏன் இந்த மாற்றம்...........?
குழப்பத்தில் குழம்புகிறேன்....!

காதலியின் திருமணம் எண்ணி


மையலில் மதி மயங்கி
மனதில் மையம் கொண்டு

மஞ்சத்தில் உறவாட எண்ணி
சிறகின்றியும் பறந்த எனக்கு

தடயமின்றி வந்த கடிதத்தை
ஆவலாய் பிரித்த போதுதான்......?
புரிந்தது.......

அதுஎனக்கு சம்மதம்
தெரிவிக்கும்
சங்கீத வார்த்தை
ஞாலமல்ல

எனக்கு சமாதிகட்டும்
உனது
திருமண ஓலை.....!

காதல் வயப்பட்ட தோழியின் இதயத்தில் வழிந்தவைகளாய்

தனிமைகள்
போதிமரங்களாகும்

இருளிலும்
இடம் மாறதோன்றும்

நளினங்கள்
நடைபழக எண்ணும்

பாதரசத்துக்கு
உடனடி வேலைவாய்ப்பு

எழிலுக்கு
பதவி உயர்வு

நிமிடமுள் மட்டுமே உள்ள
காலக்கண்ணாடி
அவளின் கைகளில்....!

வீணாய் போன நிமிடங்களை நினைத்து

கடந்துவந்த களிப்புகள்
ஒளியில்லா இருளின்

பாதையை காட்டும்
முன்னெச்சரிக்கைகளாக

இருந்திருக்க வேண்டு மென்று
இருள்நிறைந்த வழியில்
களிப்பாய் கிடைத்த

மின்னலின் ஒளியில்
நினைத்து அழுகிறேன்...

மலரை பார்த்து பெண் ஒருவள்

உன்னை சூடினால் நான்
அழகாகிவிடுவேன் ஆனால்
சூட்டுவதற்குதான் ஆளில்லை....!

அம்மா

அணுவைத் துளைத்து உலகத்தைக்கண்டவளே
உதிரங்கள் உதிர்ந்த போதும் உதிராமல் நீ
ஏனெனில் உனது உலகம் உதிராமலிருக்க...!

விலைமாது

விளக்கணைக்க மட்டும் தேவைப்படுகிறேன்
விளக்கேற்றவும் தேவைப்படுவேன் என்ற
நம்பிக்கையால் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

அம்மா

உயிர் தரும் உறவு
உலகம் அந்த உயிரோடு மட்டும்
நிலைகளுள் நிலையானதாய்
நிலைமாறா நிஜம் தேட