அதிகாலைப்பொழுதுகள்

உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்கு

ஜோதிதரிசனமாய்
உன்முகம் காட்டி

நிமிடங்களை
நிஜங்களாக்கி

நல்வழிப்படுத்துவாய் எனும்
நம்பிக்கையில்

தினமும்
உதயமாகிறது

என்
அதிகாலைப்பொழுதுகள்.............!

கல்விக்கூடம்


என்னால் அறிய முடியாத ஒருவனை
என்னுள் இருந்து எனக்கு காட்டும்
வழிகாட்டியாய் கல்விக்கூடம்

கடவுளும் மனிதனும்


உன்காதலுக்கு சுயம்வரம்
என் காதலுக்கு ஊர்வலம்

உன் சந்திப்பின் தொடக்கம்
மணவரையிலிருந்து............!


என் சந்திப்பின் தொடக்கம்
கல்லறையிலிருந்து............!

ஏனெனில் நீ இறைவன்
நான் மனிதன்.........!

தீண்டாமை


நித்தமும்
உன் நினைவுகளோடு........!

ஆனால் நிஜத்தில்
எனைவிட்டு விலகியே.............!

நான் என்ன
தீண்டத்தகாதவனா......?

நீ விலகிச்செல்வதற்கு........!

உன் தீண்டல் இல்லாவிடினும்
வார்த்தைகளாவது வந்து
சேராதா...... எனைத்தேடி

விடை காண முயலும் தோல்விகள்


ஆசைகளின் நடுவே
சிக்கிக் கொண்ட ஆறறிவு
மிருகம் நான்...................!

ஆசையை அடிமையாக்க
அடுத்த நிலையில்
தடம் பதிக்க
பயணமானேன் பாதையில்............!

பயணமான பாதை
சரியானதாய் இருந்தாலும்
சேருமிடம் அறியாமல்.................!
வெறுமையாய் திரும்பினேன்
பயணத்தின் முடிவை எட்டாமல்............!

மனமெங்கும் சோக அலைகளோடு
சேருமிடம் தெளிவில்லாமல்
பயணித்ததன் தண்டனையா
நான் பெற்ற வேதனைகள்......................?