உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்கு
ஜோதிதரிசனமாய்
உன்முகம் காட்டி
நிமிடங்களை
நிஜங்களாக்கி
நல்வழிப்படுத்துவாய் எனும்
நம்பிக்கையில்
தினமும்
உதயமாகிறது
என்
அதிகாலைப்பொழுதுகள்.............!
தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு நன்றி.. விமர்சனங்கள் அளித்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
கடவுளும் மனிதனும்
தீண்டாமை
விடை காண முயலும் தோல்விகள்
ஆசைகளின் நடுவே
சிக்கிக் கொண்ட ஆறறிவு
மிருகம் நான்...................!
ஆசையை அடிமையாக்க
அடுத்த நிலையில்
தடம் பதிக்க
பயணமானேன் பாதையில்............!
பயணமான பாதை
சரியானதாய் இருந்தாலும்
சேருமிடம் அறியாமல்.................!
வெறுமையாய் திரும்பினேன்
பயணத்தின் முடிவை எட்டாமல்............!
மனமெங்கும் சோக அலைகளோடு
சேருமிடம் தெளிவில்லாமல்
பயணித்ததன் தண்டனையா
நான் பெற்ற வேதனைகள்......................?
Subscribe to:
Posts (Atom)