வார்த்தைகளின் சோகங்கள்


கூடு தேடும் பறவையை போல்
உன் நினைவுகளின் தடம்தேடி
நித்தம் நித்தம்
தேடி அலைகிறேன்.............!

வாங்கிய கடனுக்கு வட்டியை
செலுத்தும் கடனாளியைப் போல்
வார்த்தைகள் மட்டும்
உதிர்த்து போகிறாய் உயிரற்றதாய்................!

நினைவை கொண்டு நிஜத்தை
தேடி அலையும் எனக்கு
நிஜம் மட்டுமல்ல
நினைவுகள்கூட சொந்தமில்லை
என்று கூறிச்செல்ல
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது.............?

உதிர்ந்த வார்த்தைகள் காற்றோடு
கைகோர்த்து காணாமல் போனதா.................?

இல்லை காலத்தை கடத்துவதற்காக
கூறப்பட்டதாய் எண்ணி
உன்னுடனே வந்து சேர்ந்ததா......................?

2 comments:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Monitor de LCD, I hope you enjoy. The address is http://monitor-de-lcd.blogspot.com. A hug.

Anonymous said...

சார் என்னை ஞாபகம் இருக்கா ??? இதெல்லாம் சொல்றதில்லையா ??
கலக்கற .. சில கவிதைகள் எல்லாம் ஏற்கனவே படிச்சது தான் .. ஆனா இப்போவும் புதுசாவே இருக்கு .

ஏன் இப்போ எல்லாம் எழுதறதில்ல .??