பதிலில்லா கேள்விகள்

வாழ்க்கை எனும்
வட்டத்திற்குள்சிக்கி
ஓடுபவர்கள்தான் எத்தனைபேர்............?

நோக்கம் என்னவோ பணம்
என்ற ஒன்றை நோக்கியே...!

அனைவரும் ஓட்டத்தில்
வெற்றி பெற்றாலும்
வேறுபாடுகள் தோன்ற
காரணமானவர்கள் யார்.......?

உண்மை அழகு


வியர்வைத் துளியும் அழகாக்த்தான்
உள்ளது உழைப்புக்காக ஓடும்
உன் முகத்தில் பார்க்கும்போது...!

அவளின் வார்த்தைகள்


உன் இதழ் சிந்தும்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என் உயிரை குறிபார்க்கும்
அம்புகள் என்பதை அறிவாயா....?

மென்பொருள் வல்லுநனின் நாட்கள்

மின்விசிறியின் சத்தங்களை கேட்டு
எழும் அதிகாலைப் பொழுதுகள்
தாயின் சத்தத்தை தேடும்காதுகள்.....!

தந்தையின் கண்டிப்பு இல்லாமல்
நகரும் நிமிடங்கள்......

நிற்க கூட நேரமில்லாமல்
ஓடும் மனிதர்களுக்கு நடுவே
நானும் சிக்கி ஓடி
நாளைத் தொலைத்து
திரும்புகிறேன் வெறுமையோடு...!

அப்போதாவது கேட்காதா....?
ஒருகுரல்.............
வெறுமையின் வெற்றிடத்தை
நிரப்பும் வார்த்தைகளோடு......!