மென்பொருள் வல்லுநனின் நாட்கள்

மின்விசிறியின் சத்தங்களை கேட்டு
எழும் அதிகாலைப் பொழுதுகள்
தாயின் சத்தத்தை தேடும்காதுகள்.....!

தந்தையின் கண்டிப்பு இல்லாமல்
நகரும் நிமிடங்கள்......

நிற்க கூட நேரமில்லாமல்
ஓடும் மனிதர்களுக்கு நடுவே
நானும் சிக்கி ஓடி
நாளைத் தொலைத்து
திரும்புகிறேன் வெறுமையோடு...!

அப்போதாவது கேட்காதா....?
ஒருகுரல்.............
வெறுமையின் வெற்றிடத்தை
நிரப்பும் வார்த்தைகளோடு......!

No comments: