கடவுள்



நிழல்களை நிஜங்களாக்கவும்
நிஜங்களை நிழல்களாக்கவும் அறிந்தவனே...........!

உந்தன் விளையாட்டுப் பொருளாய் எம்மை
படைத்து விளையாட விடுபவனே.........!

எம்மை அறிந்தால் உம்மை
அறிய முடியும் என்பதை....
உணர்வில்லாமல் உணர்த்துபவனே.................!

உன்னை அறிந்ததை உணர்த்தாமல்
எம்மையும் உணர்விழக்கச் செய்பவனே..........!

உன்னை வணங்குகிறேன்
ஆனால்............?

உன்னை உணர்வதற்காக அல்ல.............!
என்னை உணர்வதற்காகவே.............!

1 comment:

தமிழ் said...

/உன்னை உணர்வதற்காக அல்ல.............!
என்னை உணர்வதற்காகவே.............! /

அருமையான வரிகள்