
விடலைப் பருவத்து நாட்களில்
பாதை புரியாமலும் தெரியாமலும்
பயணிக்கும் பள்ளிப் பருவத்தில்
இணைந்திருந்த மலர்கள் நாங்கள்..........................!
பாதையை புரிய வைக்கும்
நோக்கத்தில் விதித்திருந்த
கட்டுப்பாட்டில் பாலின ரீதியாக
பிரிக்கப்பட்டவர்களானோம்........................!
இதயங்களில்
ஏக்கங்களோடு..........!
முகவரி இல்லா பறவைகளைப்போல்
நாங்களும் சில வருடங்களை
வீணாக்கினோம்.........!
இரைதேடும் பறவையாய்
நானிங்கு அலைந்து கொண்டிருந்தேன்
முகவரிகளுக்காக...............!
வருடங்களை விழுங்கி
வசந்தத்தை கொண்டுவந்தது
சில முகவரிகள்.............!
முகவரிகளின் பரிமாற்றத்தில்
சோலைவனமாயின என்மனம்....
பரிமாறிக் கொண்டவர்களின்
மனமும் அப்படித்தானே.................?
துவண்டு போகும் தருணங்களில்
தோள் தந்து துணைநிற்கும்
முகவரிகளை மறைத்ததற்காக
வஞ்சம் இறைவன் மீது
கொண்டாலும் காலம்
கடந்து திருப்பி தந்ததற்காக
வணங்குகிறேன் மனதார அவனை...............!
முகவரிகளின் பறிமாற்றாங்கள்
பயணிக்குமா..........................?
நிமிடங்களில்லா நாட்கள் என
காரணம் காட்டி..
பரிமாற்றுப்பயணம் முடிந்துபோகுமா...................?
விடகளைப்பெறுவோம்
காலதேவனின்
நாட்குறிப்பேட்டிலிருந்து......................!
1 comment:
பொருளையே மாற்றிவிட்டது ஒரு சிறிய எழுத்துப்பிழை.
//தோல் தந்து துணைநிற்கும்//
தோள் என்று இருக்கவேண்டும்.
-ஞானசேகர்
Post a Comment