விடை காண முயலும் தோல்விகள்


ஆசைகளின் நடுவே
சிக்கிக் கொண்ட ஆறறிவு
மிருகம் நான்...................!

ஆசையை அடிமையாக்க
அடுத்த நிலையில்
தடம் பதிக்க
பயணமானேன் பாதையில்............!

பயணமான பாதை
சரியானதாய் இருந்தாலும்
சேருமிடம் அறியாமல்.................!
வெறுமையாய் திரும்பினேன்
பயணத்தின் முடிவை எட்டாமல்............!

மனமெங்கும் சோக அலைகளோடு
சேருமிடம் தெளிவில்லாமல்
பயணித்ததன் தண்டனையா
நான் பெற்ற வேதனைகள்......................?

No comments: