காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்
நிகழ்வு : NITTFEST - 2007 பெற்று தந்தது : முதல் பரிசு
தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை
உதிரத்தை உயிராக்கிநிமிடங்களுக்குவேதனைகளை கொடுத்துஇன்பத்தை பெறகாத்திருந்த நாட்கள் முன்னூறு (300).........!
அவள் உயிரைப்
பறிக்கும்
வலியோடு வந்து
விழுந்தேன் மடியில்..........!
என் மூச்சுக்
காற்றின்
வெப்பத்திலும்
தழுவலிலும் எத்தனை
முறை தன்னை
மறந்திருப்பாள்........!
உயிராக்கிய உதிரத்தை
உணவாக
தந்தும் மகிழ்ந்தாள்........!
உச்சி வகுடெடுத்து
உலகிலேயே
அழகென்று
வியந்திருந்தாள்........!
உருண்டோடிப் போன
உலக
வாழ்க்கையில்
உருமாறியும் வழி
மாறியும் இருந்தேன்........!
வழிமாறிப் போன
வாழ்க்கையில்
நான் கண்ட
இன்பங்கள்
பெண்மையினால்............!
உணர்ச்சிகளின்
உச்ச கட்டத்தில்
எனக்கு
இணங்க வைத்தேன்
பணத்தினாலோ
வற்புறுத்தலிலோ.........!
உயிர் கொடுத்தவள்
அன்பாகவும்
அதட்டியும்
எத்தனை முறை
கூறியிருப்பாள்...........!
உணர்ச்சிகளால்
உண்மை
விளங்கவும் இல்லை
விளங்குவதற்கு
முயற்சிக்கவும் இல்லை.......!
காமதேவனின் காலம்
கடந்து
காலதேவனின்
கட்டுபாட்டில் இருந்த
நாட்களில் உணர்ந்தேன்..........!
வற்புறுத்தலில்
வார்த்தைகளை
வீசியவர்களின்
கனவு நனவானது..........!
உயிரை மெதுவாய்
கொல்லும்
நேய் என்னுள்
குடி கொண்டிருந்தது..........!
உறவும்
சமுதாயமும்
பிறக்கணித்தாலும்
உண்மையாய்
உடனிருந்தாள்
உயிர்கொடுத்தவள்........!
மரணத்தின்
வருகைக்கான
நாட்களை
எண்ணி நாட்களை
கடத்தி வருகிறேன்........!
இமை மூடும் சில
தருணங்களில்
இமைகளோடு வந்து
போகும்
பிம்பம்தான் இது...........!
உயிர்தந்து
உருவாக்கியவன்
உயிரற்று போகும்
கணங்களை எண்ணி
கண்ணீரோடு தாய்.......!
நான் செய்த
பாவங்களின் மொத்த
உருவமும் என்னுயிர்
எடுக்க தயாராய்
ஒருவனுமாய் இருப்பதை
காண்கிறேன்..........!
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்
நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு
தலைப்பு : சிறகு தொலைத்த தேவதை அது நிலாக்கள் சுற்றி வரும்அழகிய கிரகம்.... காற்றிலே சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளின் நகரம்.......... உறக்கமென்பது அங்கே கனவுகாணமட்டும்தான்........ அங்கே கண்ணீர் என்பது காலத்தால் களவாடப்பட்ட ஒன்று......... கொஞ்சம் பொறுங்கள்......... ஏதோவிசும்பல் கேட்கிறது..யாரது? சிதிலமடைந்த சிலந்தி வலையின்பின்னே..... அழுது சிவந்த கண்களோடு, அழகான ஒரு தேவதை..... கண்களில் மட்டும் அல்ல, கைமுழுவதும் பெருகிக் கொண்டிருக்கிறது இரத்தம்........... அவள் சிறகு தொலைத்த கதை தெரியுமா உங்களுக்கு........? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்........!மின்மினி பூச்சியாய் விட்டுவிட்டு
கண்ணடிக்கிறது அந்த வீட்டு குத்துவிளக்கு..............!இதற்கு துணையாகஒய்யாரமாய் ஓய்வெடுக்கிறதுநான்கைந்து தாம்பூழத்தட்டு.......!அதிலொன்றில் ஓடிப்பிடித்து விளையாடும் பூக்கள் சில.......!கைகோர்த்த நிலையில்உறவாடும் பூக்கள் சில.......!இதுமட்டுமா............?பூக்களும் நடத்துகின்றனபஞ்சாயத்து மெளனமொழிகளால்..........!வானவில்லின் வண்ணத்தோடுவகைவகையான பழங்களுமுண்டுபூக்களுடன் ஓரக்கண்ணால் பேசியபடி........!பேச்சின் வெட்கத்தில்தலைகுனிந்தும் சிலபூக்கள்..........!இந்த பெரியவர்களுக்கு இணையாககறை இருந்தாலும் கறைபடியாதவெள்ளை வேட்டியில் சிலர்.........!தள்ளாடும் தலைகளுக்கு நடுவேபாதி தளர்ந்த தலை ஒன்றுஎட்டி பார்த்தது கோட்டுசூட்டோடு...!கற்பூரமாய் காலம்கரைந்து கொண்டிருக்ககடிவாளமில்ல குதிரைபோல்காற்றென பறந்து வந்தாள் தேவதை ஒருத்தி..........!சூரியனே அவள்தான் என நினைப்பு......!ஆனாலும் மெதுவாய்எட்டிபார்க்கும் இருட்டு..........!நகலென வந்தவள்நாட்டியமாடிக்கொண்டிருக்கஅசலாய் இருந்தவள்அடியெடுத்து வைத்தாள்கையில் தேநீர் கோப்பைகளோடு.........!எத்தனைமுறை செய்திருப்பாள்......இன்றாவது கடைசியாகுமா.............?நடை பழகும் மழலையாய்நளினமென நடந்து வந்தாள்....!கூட்டை விட்டு எட்டிப்பார்க்கும் நத்தையாய் அவளையும்விட்டுச் சென்றது கருவிழிப்பார்வை.....!அவளின் தேவதை விண்ணுக்கும் மண்ணுக்குமாய்பாலம் கட்டிக்கொண்டிருந்தாள்....!காலம்நிமிடங்களை விழுங்கிக்கொண்டிருக்கஉற்சாகமாய் ஆரம்பித்தாள்எவ்வளவு போடுவீர்கள் என்று..........!பாலம் கட்டிக்கொண்டிருந்தவள் தரை இறங்கிய விமானம்போல் அமைதியாய் நின்றாள்.....!கடந்து சென்ற பார்வை திரும்பவந்து பதில்திசை தேடிஓடியது....!பதிலை கேட்டுவிட்டுஅவளின் இறகுகளுக்குகுறிபார்த்து குறிப்பெடுத்தாள் ஒருத்தி.........!பாதி வயதை கடந்தவளுக்கு பாதை ஏது என்றாள்.......?ஆஹா எவ்வளவு அழகானகுறி......!குறிப்பெடுத்தது என்னவோ ஒரு இறகுக்குதான்வீழ்ந்தது இரண்டாயின............!குருதி அங்கேகுமுறிக் கொண்டிருக்ககுடிசையாயில்லைஎன்று கூறிகூட்டம் கலைந்தது......!பூக்களெல்லாம் தீக்குளிக்கசிறகிழந்த தேவதையும்குமுறுகிறாள் குருதியோடு.....!நகலோ குமுறுகிறாள்
ஆனால் அசலோஅசைவற்று கிடக்கிறாள்....!நித்தம் நித்தம் சிறகொடிக்கப்படும்தேவதைகள்தான் எத்தனைஎன்றாவது ஒட்ட வைத்திருப்போமா...? சிறகினை.....சிந்திப்போம்............
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்
நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு
தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை வெற்றியின் மோகம் கொண்டுவீரம் இழப்பவனே......!எடுத்துவைப்பது
வெற்றிப்படிகளல்ல......வீழ்ச்சிப்படிகளே..........!மனசாட்சியே மந்திரமாய்உரைப்பது உணரவில்லையா.......?இல்லை....குருதி கொண்டுகதறி அழும்தாய்மையின் குரல்எட்டவில்லையா......?உன் செவிகளில்.....!சற்றே நிமிர்ந்து பார்..சாதனையை உன்னுள் விதைத்தாலும்சிரம் தளர்ந்து சரிகிறாளே ஒருத்தி..சரிவதுஅவள் மட்டுமல்ல..வெற்றியே ஆனாலும்தோல்வியே ஆனாலும்சரிபவளும் சரிபவர்களுமாய் பலர்.....வெற்றியும் தோல்விதான் ஒருவனுக்குஏனென்று தெரியுமா.........?உதிர்வதுஉதிரங்கள் மட்டுமல்ல.........உண்மைகளும் கொஞ்சம்.....!
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்
நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசுதலைப்பு : கடவுளைக் கைதுசெய்" பழங்கள் மட்டுமா உதிர்க்கப்படுகின்றன
பிஞ்சுகளுமல்லவா உதிர்க்கப்படுகின்றன......! பற்றில்லை என்று கூறி பற்றை மட்டுமே விதைக்கிறாய்.....! வளர்வது மரங்களல்ல........... மனிதர்கள்.. சாயமேற்றப்படுவது போல் நஞ்சு கலக்கப்படுகிறது நாணல்களில்.... வளைந்து மட்டுமா கொடுக்கிறது. வளைத்தும் கொடுக்கிறது நஞ்சினை.... வாய்ப்புகளை விட வழுக்கல்களே எங்கும் நிறைந்துள்ளன...... வழுக்கி எழுந்தாலும் கிடைப்பது உண்மைகளல்ல வடுக்களே..... இறைவா இப்போதாவது புரிகிறதா.. இல்லை இல்லை தெரிகிறதா.. உன் பகல் வே ஷம்..... வே ஷம்கலைக்கும் தருணங்களை தருவிக்கவே கைது செய்கிறேன்.. ஏன் தெரியுமா.............? குற்றம் செய்தவனைவிட தூண்டுபவனே முதல் குற்றவாளி அதனால் நீதான் முதல் குற்றவாளி....."
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்
நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு
தலைப்பு :்
இவர்கள் தனிமையில் தங்களைத் தொலைத்தவர்கள்............ படுக்கை தலையணை போல இவர்களும் ஒரு பொருள்தான் பலர் பார்வயில். விளக்கேற்ற யாருமில்லை விளக்கணைக்கவே ஆர்வம் பலருக்கு ............ ஆசை அறவே இல்லை மோகம் மட்டுமே முப்பது நாட்களும். ஆடைகள் இவர்களுக்கு வெறும் அலங்காரப் பொருட்கள்தான்............. வாழ்க்கை கிடைக்காத இவர்களுக்கு உங்கள் வார்த்தைகளாவது கிடைக்கட்டும்......................."நாங்களும் கண்ணகிகள்தான் ஆனால்
ராவணர்களை மட்டுமே தெரிந்தவர்கள்
நாங்களும் தாரம் ஆகிறோம்தாழ்ப்ப்பாள் போடப்படும் போது....ஆச்சரியம் தாழ்ப்ப்பாள் திறப்பதே இல்லை..........!
விட்டில் பூச்சிகளைப் போல்
எப்போதாவது விடியும் பொழுதுகள்
சூரியனைத் தேடுகிறோம்
கிடைப்பதெல்லாம்
அமாவசைகள் மட்டுமே.......
புத்தனுக்கு ஞானம் போதிமரம்
எங்களுக்கு ஞானம் இருள்
போதிமர ஞானம் பொய்யாகிப்போனது
இருள் ஞானம் இறவாமல் உள்ளது
ஆசையும் உண்டு எங்களுக்கல்ல.........?
எங்களை மீட்டுபவர்களுக்கு ....
அதுமட்டுமா.................?
எங்களை மீட்கவும் ஆசையுண்டு
எங்கள் தெய்வங்களுக்கு
தெய்வங்கள் கடைசியில்தானே ஜெயிக்கும்
இதனால்தான் எங்கள் தெய்வங்கள்
எப்போதும் கடைசியை நோக்கி.......
தெய்வங்களுக்கு உண்டு அர்ச்சனைகள்
ஆனால் எங்களுக்கு.....................?
அர்ச்சனைகளே நாங்கள் தான்....
அர்ச்சனைகள் முடிந்தால்
அரை வயிறாவது நிரையும்
இதோ அடுத்த அரை வயிறாவது
காலியாகிவிட்டது....
கவலையும் இல்லை
அர்ச்சனையும் தயாராகிவிட்டது....
அவன் படைத்த வயிறு
நிரம்பப் போவதும் இல்லை
அர்ச்சனைகள் அறியாதவர்களும் இல்லை.....!
எதற்கும் எல்லை உண்டு
ஆனால் எங்கள் இளமைக்கு.............
முடிவுகள் உங்கள் கைகளில்.................!"