நிகழ்வு : NITTFEST - 2007 பெற்று தந்தது : முதல் பரிசு
தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை
உதிரத்தை உயிராக்கி
நிமிடங்களுக்கு
வேதனைகளை கொடுத்து
இன்பத்தை பெற
காத்திருந்த நாட்கள் முன்னூறு (300).........!
அவள் உயிரைப்
பறிக்கும்
வலியோடு வந்து
விழுந்தேன் மடியில்..........!
என் மூச்சுக்
காற்றின்
வெப்பத்திலும்
தழுவலிலும் எத்தனை
முறை தன்னை
மறந்திருப்பாள்........!
உயிராக்கிய உதிரத்தை
உணவாக
தந்தும் மகிழ்ந்தாள்........!
உச்சி வகுடெடுத்து
உலகிலேயே
அழகென்று
வியந்திருந்தாள்........!
உருண்டோடிப் போன
உலக
வாழ்க்கையில்
உருமாறியும் வழி
மாறியும் இருந்தேன்........!
வழிமாறிப் போன
வாழ்க்கையில்
நான் கண்ட
இன்பங்கள்
பெண்மையினால்............!
உணர்ச்சிகளின்
உச்ச கட்டத்தில்
எனக்கு
இணங்க வைத்தேன்
பணத்தினாலோ
வற்புறுத்தலிலோ.........!
உயிர் கொடுத்தவள்
அன்பாகவும்
அதட்டியும்
எத்தனை முறை
கூறியிருப்பாள்...........!
உணர்ச்சிகளால்
உண்மை
விளங்கவும் இல்லை
விளங்குவதற்கு
முயற்சிக்கவும் இல்லை.......!
காமதேவனின் காலம்
கடந்து
காலதேவனின்
கட்டுபாட்டில் இருந்த
நாட்களில் உணர்ந்தேன்..........!
வற்புறுத்தலில்
வார்த்தைகளை
வீசியவர்களின்
கனவு நனவானது..........!
உயிரை மெதுவாய்
கொல்லும்
நேய் என்னுள்
குடி கொண்டிருந்தது..........!
உறவும்
சமுதாயமும்
பிறக்கணித்தாலும்
உண்மையாய்
உடனிருந்தாள்
உயிர்கொடுத்தவள்........!
மரணத்தின்
வருகைக்கான
நாட்களை
எண்ணி நாட்களை
கடத்தி வருகிறேன்........!
இமை மூடும் சில
தருணங்களில்
இமைகளோடு வந்து
போகும்
பிம்பம்தான் இது...........!
உயிர்தந்து
உருவாக்கியவன்
உயிரற்று போகும்
கணங்களை எண்ணி
கண்ணீரோடு தாய்.......!
நான் செய்த
பாவங்களின் மொத்த
உருவமும் என்னுயிர்
எடுக்க தயாராய்
ஒருவனுமாய் இருப்பதை
காண்கிறேன்..........!
No comments:
Post a Comment