காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம்

நிகழ்வு :
NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு

தலைப்பு :


இவர்கள் தனிமையில் தங்களைத் தொலைத்தவர்கள்............ படுக்கை தலையணை போல இவர்களும் ஒரு பொருள்தான் பலர் பார்வயில். விளக்கேற்ற யாருமில்லை விளக்கணைக்கவே ஆர்வம் பலருக்கு ............ ஆசை அறவே இல்லை மோகம் மட்டுமே முப்பது நாட்களும். ஆடைகள் இவர்களுக்கு வெறும்
அலங்காரப் பொருட்கள்தான்............. வாழ்க்கை கிடைக்காத இவர்களுக்கு உங்கள் வார்த்தைகளாவது கிடைக்கட்டும்.......................

"நாங்களும் கண்ணகிகள்தான் ஆனால்
ராவணர்களை மட்டுமே தெரிந்தவர்கள்

நாங்களும் தாரம் ஆகிறோம்

தாழ்ப்ப்பாள் போடப்படும் போது....
ஆச்சரியம் தாழ்ப்ப்பாள் திறப்பதே இல்லை..........!

விட்டில் பூச்சிகளைப் போல்
எப்போதாவது விடியும் பொழுதுகள்

சூரியனைத் தேடுகிறோம்
கிடைப்பதெல்லாம்
அமாவசைகள் மட்டுமே.......

புத்தனுக்கு ஞானம் போதிமரம்
எங்களுக்கு ஞானம் இருள்

போதிமர ஞானம் பொய்யாகிப்போனது
இருள் ஞானம் இறவாமல் உள்ளது

ஆசையும் உண்டு எங்களுக்கல்ல.........?
எங்களை மீட்டுபவர்களுக்கு ....
அதுமட்டுமா.................?

எங்களை மீட்கவும் ஆசையுண்டு
எங்கள் தெய்வங்களுக்கு
தெய்வங்கள் கடைசியில்தானே ஜெயிக்கும்
இதனால்தான் எங்கள் தெய்வங்கள்
எப்போதும் கடைசியை நோக்கி.......

தெய்வங்களுக்கு உண்டு அர்ச்சனைகள்
ஆனால் எங்களுக்கு.....................?
அர்ச்சனைகளே நாங்கள் தான்....

அர்ச்சனைகள் முடிந்தால்
அரை வயிறாவது நிரையும்
இதோ அடுத்த அரை வயிறாவது
காலியாகிவிட்டது....

கவலையும் இல்லை
அர்ச்சனையும் தயாராகிவிட்டது....

அவன் படைத்த வயிறு
நிரம்பப் போவதும் இல்லை
அர்ச்சனைகள் அறியாதவர்களும் இல்லை.....!

எதற்கும் எல்லை உண்டு
ஆனால் எங்கள் இளமைக்கு.............
முடிவுகள் உங்கள் கைகளில்.................!"

No comments: