நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு
தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை
வெற்றியின் மோகம் கொண்டு
வீரம் இழப்பவனே......!
எடுத்துவைப்பது

வெற்றிப்படிகளல்ல......
வீழ்ச்சிப்படிகளே..........!
மனசாட்சியே மந்திரமாய்
உரைப்பது உணரவில்லையா.......?
இல்லை....
குருதி கொண்டு
கதறி அழும்
தாய்மையின் குரல்
எட்டவில்லையா......?
உன் செவிகளில்.....!
சற்றே நிமிர்ந்து பார்..
சாதனையை உன்னுள் விதைத்தாலும்
சிரம் தளர்ந்து சரிகிறாளே ஒருத்தி..
சரிவது
அவள் மட்டுமல்ல..
வெற்றியே ஆனாலும்
தோல்வியே ஆனாலும்
சரிபவளும் சரிபவர்களுமாய் பலர்.....
வெற்றியும் தோல்விதான் ஒருவனுக்கு
ஏனென்று தெரியுமா.........?
உதிர்வது
உதிரங்கள் மட்டுமல்ல.........
உண்மைகளும் கொஞ்சம்.....!
No comments:
Post a Comment