காணிக்கை


உன் நினைவுகளால் உறங்கிப்போன
எனக்கு கனவுகள்
மட்டும் காணிக்கையா...?

புதுப்பிக்கப்பட்ட உறவுகள்


விடலைப் பருவத்து நாட்களில்
பாதை புரியாமலும் தெரியாமலும்
பயணிக்கும் பள்ளிப் பருவத்தில்
இணைந்திருந்த மலர்கள் நாங்கள்..........................!

பாதையை புரிய வைக்கும்
நோக்கத்தில் விதித்திருந்த
கட்டுப்பாட்டில் பாலின ரீதியாக
பிரிக்கப்பட்டவர்களானோம்........................!

இதயங்களில்
ஏக்கங்களோடு..........!

முகவரி இல்லா பறவைகளைப்போல்
நாங்களும் சில வருடங்களை
வீணாக்கினோம்.........!

இரைதேடும் பறவையாய்
நானிங்கு அலைந்து கொண்டிருந்தேன்
முகவரிகளுக்காக...............!

வருடங்களை விழுங்கி
வசந்தத்தை கொண்டுவந்தது
சில முகவரிகள்.............!

முகவரிகளின் பரிமாற்றத்தில்
சோலைவனமாயின என்மனம்....

பரிமாறிக் கொண்டவர்களின்
மனமும் அப்படித்தானே.................?

துவண்டு போகும் தருணங்களில்
தோள் தந்து துணைநிற்கும்
முகவரிகளை மறைத்ததற்காக
வஞ்சம் இறைவன் மீது
கொண்டாலும் காலம்
கடந்து திருப்பி தந்ததற்காக
வணங்குகிறேன் மனதார அவனை...............!

முகவரிகளின் பறிமாற்றாங்கள்
பயணிக்குமா..........................?

நிமிடங்களில்லா நாட்கள் என
காரணம் காட்டி..
பரிமாற்றுப்பயணம் முடிந்துபோகுமா...................?

விடகளைப்பெறுவோம்
காலதேவனின்
நாட்குறிப்பேட்டிலிருந்து......................!

அதிகாலைப்பொழுதுகள்

உன் நினைவுகளோடு
திறக்கும் விழிகளுக்கு

ஜோதிதரிசனமாய்
உன்முகம் காட்டி

நிமிடங்களை
நிஜங்களாக்கி

நல்வழிப்படுத்துவாய் எனும்
நம்பிக்கையில்

தினமும்
உதயமாகிறது

என்
அதிகாலைப்பொழுதுகள்.............!

கல்விக்கூடம்


என்னால் அறிய முடியாத ஒருவனை
என்னுள் இருந்து எனக்கு காட்டும்
வழிகாட்டியாய் கல்விக்கூடம்

கடவுளும் மனிதனும்


உன்காதலுக்கு சுயம்வரம்
என் காதலுக்கு ஊர்வலம்

உன் சந்திப்பின் தொடக்கம்
மணவரையிலிருந்து............!


என் சந்திப்பின் தொடக்கம்
கல்லறையிலிருந்து............!

ஏனெனில் நீ இறைவன்
நான் மனிதன்.........!

தீண்டாமை


நித்தமும்
உன் நினைவுகளோடு........!

ஆனால் நிஜத்தில்
எனைவிட்டு விலகியே.............!

நான் என்ன
தீண்டத்தகாதவனா......?

நீ விலகிச்செல்வதற்கு........!

உன் தீண்டல் இல்லாவிடினும்
வார்த்தைகளாவது வந்து
சேராதா...... எனைத்தேடி

விடை காண முயலும் தோல்விகள்


ஆசைகளின் நடுவே
சிக்கிக் கொண்ட ஆறறிவு
மிருகம் நான்...................!

ஆசையை அடிமையாக்க
அடுத்த நிலையில்
தடம் பதிக்க
பயணமானேன் பாதையில்............!

பயணமான பாதை
சரியானதாய் இருந்தாலும்
சேருமிடம் அறியாமல்.................!
வெறுமையாய் திரும்பினேன்
பயணத்தின் முடிவை எட்டாமல்............!

மனமெங்கும் சோக அலைகளோடு
சேருமிடம் தெளிவில்லாமல்
பயணித்ததன் தண்டனையா
நான் பெற்ற வேதனைகள்......................?