விந்தையானவள் ( தாய் )

எனக்காகவே படைக்கப்பட்ட
இறைவனின் படைப்பு அவள்...!

அன்பை மட்டும் அள்ளித்தரும்
அட்சய பாத்திரம் அவள்...!

தரும் அன்பை திரும்ப
கேட்கவோ வாங்கவோ ஏன்

எதிர்பார்(க்க)ப்பதற்கு கூட தெரியாத
களங்கமற்ற தேவதை அவள்....!

நினைவுகள் மட்டுமல்ல..
சொட்டும் வியர்வை கூட என்

பெயர் சொல்லுமளவிற்கு நினைவுகள்
உந்தன் நெஞ்சில் ஆனால்.....

நானோ உன்னை மறந்து
காதல் என்ற பெயரில்

எவளோ ஒருத்தியின் நினைவுகளோடு..!
இறைவா எனை செதுக்கும்

தேவதையின் நினைவுகளை என்
குருதியில் கலப்பயாக....!

No comments: