கருவறை

உன் நினைவுகள் என்னுள்
தோன்றும் பொழுதெல்லாம்..
எனக்கே தெரியாமல் என்
கவலைகளும் சோகமும் மறைந்து
சந்தோசம் ஒளிவீசத் தொடங்குகிறது...!

ஏன்..?
உன் நினைவுகளுக்கு
மட்டும் இப்படி ஒருசக்தி..!

காரணங்கள்
மட்டும் புரியவில்லை......!

இருந்தாலும்
ஒன்று மட்டும் புரிகிறது....!

உந்தன் கருவறையில் நானிருந்ததால்
உன் நினைவுகள் என்னை
சந்தோக்ஷப்படுத்துகிறது என்பது...!

No comments: