மழைக்கால நினைவுகள்


இறைவனின் குழந்தைகளாய்
பூமியை அடைபவளே...!

சில்லென்று வீசும் காற்றால்
அழைக்கழிக்கப்பட்டு ஜன்னலை
தீண்டும்போது நானும் உன்னை
தழுவினேன் உன்மீது
காதல் கொண்டு.....!

உன் இதமான தீண்டலில்
நான் பின்னோக்கி பயணித்தேன்...

அரைகால் டவுசருடன் புயலாய்
வீட்டில் நுழைந்தோம் இருவரும்..
ஏனெனில் என்வீடு உன்னையும்
வரவேற்க தயாராய் இருந்தது
வறுமையால் உடைந்துபோன கூரைகளாக..!

சந்தோசமாக வீட்டுக்குள்
நுழைந்த உன்னை வெறுக்கவே
செய்தாள் என் தாய்...!

பாழாய்ப்போன வீட்டிற்கு
எப்பொதுதான் விடிவோ...?
முணுமுணுப்போடு பாத்திரங்களை
வைக்கிறாள் நீநுழைந்த இடத்தில்..
அதில் கொஞ்சம்பங்கு எனக்கும்...!

உனது ஒய்யார ஆட்டம் நின்றபின்
உன்னை எடுத்துப் பார்த்து
போற்றுகிறாள் உன்
தூய்மையின் குணம் கண்டு..!

சந்தோசமாய் வந்தவள் சற்று
சிரமும் கொடுத்தாய்...ஆனால்
போகும்போது சந்தோசம்
மட்டுமல்ல உதவியும் செய்தாய்...!

சந்தோசம் எனக்கு உன்னை
கொண்டுவரும் வேலை இல்லை..
சந்தோசம் என் தாய்க்கு
அமிர்தமாகிய உன் சுவையால்..!

இந்த இன்பத்திற்காகவே வேண்டுகிறேன்
இறைவனை உந்தன் வருகயை
சற்று அதிகப்படுத்த.....!

No comments: