தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு நன்றி.. விமர்சனங்கள் அளித்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
சில தருணங்கள்
நித்தம் நித்தம்
வந்துபோகிறாய்
நினைவுகளில்.........!
காரணங்கள் மட்டும்
புரியவில்லை......!
உன் வார்த்தைகளை புரிந்து
கொள்ள முடியாமல்
மதில்மேல் பூனையாய் நான்....!
ஆனாலும் என்னுள் ஒருபயம்
விட்டுவிட்டு எட்டிப்பார்க்கிறது
கடமைகளை
மறந்துவிடுவேனோ என்று...?
இந்தப் போராட்டங்கள்
உன்னுள்ளும்
நிகழ்கிறதா.....?
ஆம் என்றால் உன்
வார்த்தைகள் என்
வாழ்வின் ஒளிக்கீற்றுகள்...!
இல்லையெனில் அவை
இடரவைக்கும்
இருளின் பாதைகள்...!
என்னவளே உனக்கு
ஒரு வேண்டுகோள்....!
என்னைக்குழப்பும்
உன் சந்தோக்ஷத்தை
மட்டும் விட்டுவிடு
எனக்காக......!
ஏனெனில் நானிங்கு கலவரபூமியாய்
ஆனால் நீஅங்கு...........?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment