அர்ப்பணிப்பு


என் நலம் வேண்டி கடவுளின் காலடியில்
நித்தம் தொழுபவள் நீ....!

உன் நலம் வேண்டி என்றாவது
ஒரு நாள் தொழுதிருப்பேன்...!

உனை பார்த்து கற்றுக்கொண்ட என்னால்
முடியவில்லை நித்தமும் தொழ
உனக்காக.....!

யாரையும் பார்த்து கற்றுக்கொள்ளாத
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...?
நித்தமும்
எனக்காக தொழ...

இதனால்தானோ உன்னை
நடமாடும் தெய்வம் என்கிறார்கள்..

காரணங்களை நீ மட்டுமே அறிவாய்.....!

No comments: