ஒவ்வொரு துளியிலும் நான் ( பணம் )


கருவறைக் கன்னிகளின் சுவாசம்
வாசமாய் மறைய
வைத்தவனும் நான்......!

சுயநலங்களின் சுருங்கிய
உள்ளத்திற்காக பிஞ்சுகளையும்
பொதி சுமக்க வைத்தவனும் நான்.....!

பருவத்து பெண்டிரை
பதுமைகளாக்கும் சூதாட்டத்தில்
பகைடையாய் நான்....!

காலத்தோடு இளமை கறைந்தும்
மாங்கல்யம் கிடைக்கச்
செய்யாமலிருக்க செய்தவனும் நான்....!

உண்மைகள்
ஊமையாய் போக
உயிர்மூலமும் நான்....!

இரவுகள் இருந்தும்
விடியலை விரட்டி
ஓட்டும் விதியும் நான்.....!

உரிமைகள் இருந்தும்
உறவுகள் மறைய இல்லை
உறவுகள் மறக்க அங்கு
இல்லாமல் போனவனும் நான்.....!

உயிர்கள் மறைந்தபின்
உறவை புதுப்பிக்க
அங்கே வாதாடுவதும் எனக்காக.....!

துளிகள் மட்டும் வெவ்வேறு
காலங்களில் ஆனால் ஒவ்வொரு
துளியிலும் மாறாமல் இருக்கும்
நான் யாரென்று உங்களுக்கும்
தெரிந்திருக்கும் உங்களுள் ஒருவன் .....!

No comments: