காதல் வயப்பட்ட தோழியின் இதயத்தில் வழிந்தவைகளாய்

தனிமைகள்
போதிமரங்களாகும்

இருளிலும்
இடம் மாறதோன்றும்

நளினங்கள்
நடைபழக எண்ணும்

பாதரசத்துக்கு
உடனடி வேலைவாய்ப்பு

எழிலுக்கு
பதவி உயர்வு

நிமிடமுள் மட்டுமே உள்ள
காலக்கண்ணாடி
அவளின் கைகளில்....!

No comments: